உலகம் வெப்பமயமாதலை கட்டுப்படுத்த கார்பன் டை ஆக்சைடை உண்ணும் பாக்டீரியாவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகின் வெப்பநிலை சமீபகாலமாக வெகுவாக அதிகரித்து வருகிறது. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைட் அதிகரித்து வருவது தான் இதற்கு பிரதான காரணமாக காணப்படுகின்றது. எனவே வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவைக் குறைப்பதற்கு விஞ்ஞானிகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இதற்கு தீர்வு காணும் வகையில், கார்பன் டை ஆக்சைடை மட்டுமே உணவாக உட்கொள்ளக்கூடிய பாக்டீரியாவை செயற்கையாக உருவாக்கியுள்ளனர். ஈகோலி வகையான பாக்டீரியாவில் ஜீன் மேப்பிங் முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா, கார்பன் டை ஆக்சைட் உட்கொண்டு சர்க்கரையை (Sugar) வெளியேற்றக்கூடியது. இவ்வாறு வெளியேற்றப்படும் சர்க்கரையை, ஆரோக்கியமான முறையில் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.